செவ்வாய், 21 மே, 2013

சுய இன்பம்

சுய இன்பம் பற்றி உலமாக்கள் இடத்தில் கருத்து வேறுபாடு உள்ளது, சிலர் விபச்சாரத்திர்க்கு சென்று விடுவோம் என்று நினனத்தால் அந்த நேரத்தில் மட்டும் கூடும் என்றும், சிலர் அறவே கூடாது என்றும் சொல்கிறார்கள், ஆனால் அறவே கூடாது என்பது தான் பெறும்பாலான உலமாக்களின் கறுத்து, அதற்கு அவர்கள் கீழ்கண்ட வசனத்தை ஆதாரமாக கொள்கின்றனர், அதுவே ஏற்க்கத்தகதாக உள்ளது.


தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர,தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.

அல்குர்ஆன் 23:5,7

இதற்கு அப்பால் தேடியவர்களே வரம்பு மீறியவர்கள் என்று சொல்வதில் இருந்து சுய இன்பம் அனுமதிக்கபட்டது அல்ல என்று விலங்களாம்.

அந்த பாவத்தில் இருந்து தவிர்ந்து கொள்ள அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் வழிகாட்டி உள்ளார்கள்.

இளைங்கர்களே, உங்களில் திருமணம் செய்ய சக்தி பெற்றவர்கள் திருமணம் செய்யட்டும், யாருக்கு சக்தி இலலையோ அவர்கள் நோன்பு வைக்கட்டும், தவறான வற்றிலிருந்து அது உங்களை காக்கும்.
(முஸ்லிம்)

இது மட்டும் அல்லாமல் இஸ்லாதில் கற்று தந்த சில பண்புகளை பேணுவதின் மூலமும் தவிர்ந்து கொள்ளாம்.

• நல்ல நண்பர்களுடன் சேர்ந்து இருத்தல்
• 
சமுதாய நல பணிகளில் நம்மை அதிகம் இனைத்து கொள்ளல்
• 
வணக்கவழி பாடுகளை அதிகம் செய்தல்
• 
ஆண், பெண் கலந்து இருக்க கூடிய சபையிலிருது தவிர்ந்து கொள்ளல்
• 
தொலைகாட்சி, இனையத்தலதை பயன் படுத்துவதற்கு முன் ஷைத்தானை விட்டும் அல்லஹ்விடத்தில் பாதுகாப்பு தேடி கொள்ளல்.

இது அனைத்திற்க்கும் மேலாக இந்த வசனத்தை நினைவில் வேத்திருத்தல்,
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىِ
فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىِ

யார் தமது இறைவன் முன்னே 
நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.

அல்குர்ஆன் 79- 40,41.

2. ஓரிணச்சேர்க்கை கூடுமா..?

இது இஸ்லாதில் அறவே கூடாது, இதற்க்கு கடுமையான் தண்டனையும் உள்ளது. கிழ்கண்ட வசனத்தை சிந்திதால் விளங்கும்.

லூத்தையும் (தூதராக அனுப்பினோம்). "உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக்கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?'' என்று தமது சமுதாயத்திடம் கேட்டார்.

"நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' (என்றும் கூறினார்.)

"இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் சுத்தமான மனிதர்களாக உள்ளனர்'' என்பதே அவரது சமுதாயத்தின் பதிலாக இருந்தது.

எனவே அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும், அவரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக இருந்தாள்.

அவர்களுக்கு பெருமழையைப் பொழிவித்தோம். குற்றவாளிகளின் முடிவு எவ்வாறு இருந்தது?' என்பதைக் கவனிப்பீராக!
அல்குர்ஆன் 7:80-84


tamilislam-qa thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக